பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது -  பள்ளிக்கல்வித்துறை.

 


 

 

 பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையை  பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 6 முதல் 12 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர்  5 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை விடுமுறை .


  எண்ணும் எழுத்தும், இரண்டாம் பருவத்திற்கு ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் 6 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறுவதால் 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.