PTA மூலம் தொகுப்பூதியத்தில் முதுகலை ஆசிரியர் நியமனம் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! 


அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 2774 பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அரசால் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மேற்காண் அரசாணையின்படி காலியாக உள்ள பணியிடங்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் 04.12.2021 - க்குள் அறிக்கை அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் செயல்முறைகளின் தெரிவிக்கப்பட்டது.