TNPSC - ல் வேலை வாய்ப்பு.சம்பளம்: ரூ.37,700 - ரூ.1,19,500. last Date:(23.10.2021).

 தமிழ்நாடு நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் துணை சேவையில் காலியாக உள்ள கட்டடக்கலை உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


இந்த பணிக்கு 01.07.2021 தேதியின் படி, SCs, SC(A)s, STs, MBC(V)s, MBCs and DNCs, MBCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 30 க்குள் இருக்க வேண்டும்.


இந்த பணிக்கு கல்வி தகுதியாக Master of Town Planning அல்லது அதற்கு இணையான பாடங்களில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Associate Membership of the Institute of Town Planners of India or Institute of Architect, Degree in Civil Engineering , Degree in Architecture அல்லது A.M.I.E (Civil) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 08.02.2022 அன்று நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு குறைந்தபட்சம் ரூ.37,700 முதல் அதிகபட்சம் ரூ.1,19,500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஆர்வம் உள்ள நபர்கள் www.tnpscexams.in என்ற இணைய முகவரி மூலம் அக்டோபர் 23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.




For More Details:

 https://drive.google.com/file/d/1XtviyWUQpqvkePKBOZ7T1_psdOMyb99E/view?usp=sharing