9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு சிறுசிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் முழு எண்ணிக்கையில் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளதால் தேர்வு நடத்த முடியவில்லை விரைவில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment