TNPSC GROUP - 4 Important Study Material Tamil ( Unit - 5)


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை

தமிழ் - இலக்கணம் 


* தமிழ் மொழியில் உள்ள மிகப்பழமையான இலக்கணநூல் - தொல்காப்பியம்


* தொல்காப்பியத்தைச் சார்ந்து எழுந்த இலக்கணநூல்  - நன்னூல்


* நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் (காலம் 12, 13 கி.பி.நூற்றாண்டு)


* நன்னூலில் உள்ள நூற்பாக்கள் - 462


* நன்னூலின் வேறு பெயர்கள் - சிற்றதிகாரம், சின்னூல், பின்னூல்


* நூல்கள் மூவகைப்படும் (அகத்தியம்-முதல் நூல், தொல்காப்பியம்-வழிநூல், நன்னூல்-சார்பு நூல்(புடை நூல்)


* எழுத்திலக்கணம் எத்தனை வகைப்படும் - பன்னிரண்டு


* மனிதர்களைப் போல எழுத்துக்களுக்கும் நட்பும், இனமும் உண்டு.


* நட்பு எழுத்துக்களை இன எழுத்துக்கள் என மரபிலக்கணம் கூறுகிறது.


* எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை. முதல் எழுத்து, சார்பெழுத்து




* முதல் எழுத்துக்கள் - 30 (உயிரெழுத்து - 12, மெய்யெழுத்து - 18)


* சார்பெழுத்துக்கள் - 10


* தமிழ் எழுத்துக்கள் மொத்தம் - 247


* குறில் எழுத்துக்கள் - 5, நெடில் எழுத்துக்கள் - 7


* உயிர்மெய் குறில் எழுத்துக்கள் - 90.


* உயிர்மெய் நெடில் எழுத்து - 126


* மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். (வல்லினம்-6, மெல்லினம்-6, இடையினம்-6)


* தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துக்கள் - உடனிலைமெய்மயக்கம்


* ர, ழ - என்னும் இரண்டு மெய்களும் தம்முடன் தான் மயங்காது.


* தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் எழுத்துக்கள் - வேற்றுநிலை மெய்ம்மயக்கம்




* ஆய்தம் சார்பெழுத்து வகையைச் சேர்ந்தது.


* உயிர்மெய் எழுத்துக்கள் சார்பெழுத்து வகையில் அடங்கும்.


* ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அக்கேணம் என்பவன.


* ஆய்த எழுத்து ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும்.


* சுட்டுப்பொருளை உணர்த்தும் எழுத்துக்கள் - சுட்டு எழுத்துக்கள்.


* சொல்லின் அகத்தே நின்று சுட்டுப்பொருளை தருவது - அகச்சுட்டு (எ.கா. அவன், இவன்)


*  சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை தகருவது - புறச்சுட்டு (எ.கா. அக்குதிரை)


*   தொலைவில் உள்ளதைச் சுட்டும் எழுத்து - சேய்மைச்சுட்டு (அவன்)


*   அருகில் உள்ளதை சுட்டும் எழுத்து - அண்மைச்சுட்டு (இவன்)






  *   அ, இ, என்னும் சுட்டுடெழுத்துக்கள் அந்த , இந்த எனத் திரிந்து வழங்குவதை - சுட்டுத் திரிபு.


*   நாம் பயன்படுத்தாத சுட்டு எழுத்து - "உ"


*   வினாப்பொருளை உணர்த்தும் எழுத்துக்கள் - வினா எழுத்துக்கள்


*   சொற்களின் முதலில் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் - எ, யா (எது?, யார்?)


*   சொற்களின் இறுதியில் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் - ஓ, ஆ (அவனோ?, அதுவா?)


*   சொல்லின் முதலிலும், இறுதியிலும் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்து - ஏ, (ஏன்? அன்றோ?)


*   உயிர் எழுத்துக்களில் குற்றெழுத்துக்களுக்கு நெட்டெழுத்துக்கள் இனமாகும்.




*   வல்லின மெய்யெழுத்துகளுக்கு மெல்லினமெய் இனமாகும்.


*   எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு - மாத்திரை ஆகும்


*   குறில் - 1 மாத்திரை, நெடில் - 2 மாத்திரை


*   ஆய்தத்திற்கும், மெய்யெழுத்துக்களுக்கும் 1/2 மாத்திரை.


*   உயிரளபெடைக்கு மூன்று மாத்திரை, ஒற்றளபெடைக்கு 1 மாத்திரை


*  செய்யுளிசை அளபெடை ஈரசை கொண்ட சீர்களாக மட்டும் வரும். (உழாஅர், படா அர்)


* செய்யுளிசை அளபெடையை இசைநிறையளபெடை என்றும் வழங்குவர் (அளபெடை என்பதன்பொருள் நீண்டு ஒலித்தல்)


* ஓசை குறையாத போதும் இனிய இசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை(செய்யுளில்)


*  இன்னிசை அளபெடை மூவசை சீர்களாக மட்டும் வரும்(கொடுப்பதூஉம், எடுப்பதூஉம்)


*   பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப்பொருளில் வருவது - சொல்லிசை அளபெடை