தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 ,10 ,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.
இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று அதிக அளவில் பரவவில்லை எனவே சுகாதாரத்துறை, கல்வியாளர்கள், உயரதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோ சனைக்கு பின்பு தற்போது 1முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது
0 Comments
Post a Comment