மாணவர்களுக்கு T.C தர மறுக்கக் கூடாது – சென்னை ஐகோர்ட் உத்தரவு!


தனியார் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக TC கொடுக்க மறுக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளன நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 இத்தகைய சூழலில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் TC வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது .TC இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.