பொறியியல் சேர்க்கைக்கு இனி வேதியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமில்லை -  உயர்கல்வித்துறை விளக்கம்!


பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இனி வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமில்லை என உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே 10 ,11 மற்றும்  12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு முடிவு ஆகியவற்றை கணக்கிட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப் பட்டது.

 இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வரும் இந்த நிலையில்  நாளையுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ள நிலையில் புதிய வழிகாட்டுதலை உயர்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களில் மதிப்பெண்கள் கட்டாயம் இந்த நிலையில் வேதியியல் மதிப்பெண்கள் கட்டாயமில்லை என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

இந்த முறை 10 ஆம் வகுப்பு மதிப்பெண் 12 ம் வகுப்பு கணிதம், இயற்பியல் மற்றும் விருப்பப் பாடத்தின் மதிப்பெண், பிறந்த தேதி, ரேண்டம் எண் என ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளதாக உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.