தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பேராசிரியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் -  கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.!


 தமிழகத்தில் வரும் செப்டம்பர்  1 -ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.

 அதன் விவரத்தை பார்க்கலாம்.

 தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 ,10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மற்றும் அனைத்து கல்லூரிகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்லூரிகளை பொருத்தவரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் 2 தவனை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.