தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை உத்தரவு -  முழுவிவரம்.

 பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு நிகழ் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைசெயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது பின்வருமாறு;

 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில, மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறுவளமைய ங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் வழங்க அரசு உத்தரவிடுகிறது.

 நிகழ் கல்வியாண்டில் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்திட வேண்டும்.

 மேலும் தற்போது தேர்வு செய்யப்படும் பணியில் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்து, பணியில் தொடர விரும்பினாலும் அதனை அனுமதிக்க தேவையில்லை.

 2014 - ஆம் ஆண்டில் நிர்ணயிக்கபட்ட பணி இடங்களில் சேர்ந்த 500 பட்டதாரி ஆசிரியர்களை  பணியமர்த்த வேண்டும்.

 ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் செய்யப்படும் போதும், பணியிடங்களுக்கு பாடவாரியாக திறமையும் அனுபவமும் சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 ஆசிரியர்  பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு, ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். கலந்தாய்வு அனைத்து கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மட்டுமே நடைபெறும் என இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.