தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஓரிரு நாட்களில் முடிவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.


தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு .அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

 நாளொன்றுக்கு 50 சதவீத மாணவர்களை மட்டும் பள்ளியில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதலில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .

அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளை அவர் எச்சரித்துள்ளார். 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் அவர் ஏற்கனவே கூறியிருந்தார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசு பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் தைரியமாக முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .கொரோனா கட்டுக்குள் வந்தபின் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பதற்கும் அதில் ஆலோசிக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.