தமிழகத்தில் 7 IAS அதிகாரிகள் இடமாற்றம். தமிழக அரசு உத்தரவு - முழு விவரம்.


தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது .

 தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:

1. நில நிர்வாக இணை ஆணையராக S.செந்தாமரை


2. பொதுப்பணித் துறை இணைச் செயலாளராக மகேஷ்வரி ரவிக்குமார்


3. வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குனராக பதவி வகித்து வரும் M.அருணா கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


4. தமிழ்நாடு  குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குனராக பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் வேளாண்மை துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


5. பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக பதவி வகித்து வரும் J.ஆனிமேரி ஸ்வர்ணா வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை  துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


6. உள்துறை இணை செயலாளராக பதவி வகித்து வரும்A. ஜான் லூயிஸ் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


7. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் M. லக்ஷ்மி சி.எம்.டி.ஏ தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.