தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு .!


 தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்யும் மாவட்டம் விவரம் பின்வருமாறு:
 தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மட்டும் வெப்பச் சலனத்தின் காரணமாக
 *சேலம்
 *தர்மபுரி
*விழுப்புரம்

 *திருவண்ணாமலை

 *கடலூர்
*அரியலூ
 *பெரம்பலூர்
* தேனி
*திண்டுக்கல்
மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 நாளை மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு ;
*வேலூர்
*ராணிப்பேட்டை

 *திருவள்ளூர்
*தேனி
*திண்டுக்கல்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்களான
 புதுவை
காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 சென்னை நிலவரம்;


 சென்னையை பொறுத்தவரை வானம் பிற்பகலில் ஓரளவு மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மீனவர்களுக்கான அறிவிப்பு;

 
 தென்மேற்கு வங்கக்கடல் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.