தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்- எந்த மாவட்டங்கள் தெரியுமா?


 தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று
 நீலகிரி
 கோவை

இந்த இரண்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான திண்டுக்கல்
தேனி
 தென்காசி
  ஈரோடு
 சேலம்
கிருஷ்ணகிரி 

இராணிப்பேட்டை

 வேலூர்
 தர்மபுரி
காஞ்சிபுரம்
 செங்கல்பட்டு
 சென்னை
 கன்னியாகுமரி

ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 சென்னை நிலவரம்: சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 மீனவர்களுக்கான அறிவிப்பு:
 தமிழக கடலோர மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.