தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல் ..!


வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 மழை பெய்யும் மாவட்டங்கள் பெயர் பட்டியல் பின்வருமாறு:

 
 பெரம்பலூர்
 அரியலூர்
 சேலம்
 தர்மபுரி
 கிருஷ்ணகிரி
 புதுக்கோட்டை
 தஞ்சாவூர்
 திருவாரூர்
 நாகப்பட்டினம்
 மயிலாடுதுறை

 இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 நாளை மழை பெய்யுமா வட்டங்கள் பட்டியல் பின்வருமாறு:


  தர்மபுரி
சேலம்
நாமக்கல்
 திருச்சி
 அரியலூர்
 பெரம்பலூர்
 கள்ளக்குறிச்சி

இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நிலவரம்:


 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான
 நீலகிரி
கோயம்புத்தூர்
 தேனி
திண்டுக்கல்

 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை நிலவரம்:


 சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 மீனவர்களுக்கான அறிவிப்பு :


இன்று முதல் வரும் பத்தாம் தேதி வரை மேற்கு வங்க கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு லட்சத்தீவு ,தென்மேற்கு,  மத்தியமேற்கு  அரபிக்கடல் இந்த பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்  காற்று வீசக் கூடும் என்பதால் இன்று முதல் வரும் பத்தாம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.