CTET- எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் ஆயுள் முழுக்க செல்லும் என சி.பி.எஸ்.இ அறிவிப்பு.

 
 ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் சான்றிதழ்கள் ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது சமீபத்தில் மாற்றப்பட்டு ஆயுள் முழுக்க செல்லுபடியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வான( CTET) முடித்தவர்களின் சான்றிதழ்கள்  அவர்கள் ஆயுள்காலம் முழுவதும் பணியில் சேர செல்லத்தக்கது என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கு புதிய சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.