தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில்  கன மழைக்கு வாய்ப்பு!  வானிலை ஆய்வு மையம் தகவல்.


 வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில்

 *அரியலூர்
* பெரம்பலூர்
*கடலூர்
* திண்டுக்கல்

 மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 நாளை மழை பெய்யுமா மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* தேனி
* திண்டுக்கல்
*மதுரை

 இந்த மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகிற 24-ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான
* நீலகிரி
* கோவை
* திருப்பூர்
* தேனி
*திண்டுக்கல்

மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் இடம் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய தென் மேற்கே அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.