12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம். தமிழக அரசு உத்தரவு!

 

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவு பின்வருமாறு:

1. ஜக்மோகன் சிங் ராஜூ டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு கூடுதல் தலைமை செயலாளராக நியமனம்

.2. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளராக இருந்த மதுமதி. ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக நியமனம்.

3.ஷஜான் சிங் ஆர். சவான், ரேஷன் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் தற்போது மீன்வளத்துறையின் கூடுதல் ஆணையராக நியமனம்.

4.சேலம் மாவட்ட கலெக்டராக இருந்த ராமன் தோட்டக்கலைத்துறை மற்றும் பயிர்கள் வளர்ச்சி துறை இயக்குனராக நியமனம்.

5.கடலூர் கலெக்டராக இருந்த சந்திரசேகர் சேகமௌரி ஊரக வளர்ச்சி துறை இணை செயலாளராக நியமனம்.

6.தர்மபுரி மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகா, உயர்கல்வித்துறை இணை செயலாளராக நியமனம்.

7.மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த அன்பழகன் கரும்பு வளர்ச்சி துறை கூடுதல் ஆணையராக நியமனம்.

8.மாநில திட்டங்கள் நலத்துறை இயக்குனர் அமிர்தஜோதி, கார்ப்பரேசன் மற்றும் உணவு, நுகர்வோ நலத்துறை இணை செயலாளராக நியமனம்.

9.மத்திய பெட்ரோல் மற்றம் இயற்கை எரிவாயு துறையின் இணை செயராளராக இருந்த ஆஷிஸ் சாட்டர்ஜி, டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர்-II ஆக நியமனம்.

10.கடல்வாரியத்தின் துணை சேர்மன் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி கிறிஸ்துராஜ், தற்போது பொது மற்றும் மறுவாழ்வு நலத்துறை துணை செயலாளராக நியமனம்

11.பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் முதன்மை செயலாளர் சந்திரகாந்த் பி காம்பாலே, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் முதன்மை செயலாளராக நியமனம்.

12. தமிழக சிவில் சப்ளை துறை ஆணையராக இருந்த சுதா தேவி, தமிழ்நாடு நீர்நிலை வளர்ச்சி துறை இயக்குனராக நியமனம்.