தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!


 தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் 5 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களின் சிலர் வேலையின்றி தவித்து வரும் நிலையில் உள்ளதாகவும் சிலர் கூலி வேலைக்குச் செல்வதாக கேள்விப்பட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

 இது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளதாகவும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க முதல்வர் நல்லதொரு முடிவை எடுப்பார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வை எந்த நேரத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்றும் சட்டசபை கூடும் நேரத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். எந்த வித அவசரமும் இல்லாமல் பிளஸ் டூ மாணவர்களுக்கு அவகாசம் வழங்கிய பின்னரே பிளஸ்-2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.