புகை பிடிப்போருக்கு கொரோனா பாதித்தால்  மரண வாய்ப்பு அதிகம், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

 புகைப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு மரணம் அடையும் ஆபத்து அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் உள்ளே சென்றதும் நுரையீரலை பாதிப்பை ஏற்படுத்துவதாகும் புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும் என்பதால் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தால் மரணமடையும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது நல்லது என்றும் புகைப்பவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் புகைப்பதை நிறுத்துவது நல்லது என்றும் பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு  வேண்டுகோள் விடுத்துள்ளது.