ஊரடங்கில்அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்! அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை!


கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள இந்த நிலையில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளதாக  அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை  காரணமாக கொண்டு 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணம் நடத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் இது குறித்து இன்று தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து தெரிவித்த அவர் குழந்தை திருமணங்கள் சட்டப்படி பெரும் குற்றம் என்றும் குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குழந்தைகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்கள் எச்சரித்துள்ளார்.