கொவிட் -19 இரண்டாவது அலை : இபிஎப் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்க அனுமதி 


கொவிட் -19 இரண்டாவது அலையை முன்னிட்டு , இபிஎப் சந்தாதாரர்கள் , தங்கள் கணக்கில் இருந்து 2 வது முறையாக முன்பணம் எடுத்துக் கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் ( இபிஎப்ஓ ) அனுமதித்துள்ளது. கொவிட் தொற்று சமயத்தில் இபிஎப் சந்தாதாரர்கள் சிறப்பு முன்பணம் எடுத்துக்கொள்ளும் வசதி பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் ( PMGKY ) கடந்த 2020 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது . இதற்கான திருத்தத்தை அரசாணை மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1952 - ல் , மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செய்தது . இந்த விதிமுறையின் கீழ் , 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி ( டி.ஏ ) அல்லது இபிஎப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ , அதை திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணமாக இபிஎப் சந்தாதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் . குறைவான தொகைக்கும் , உறுப்பினர்களால் விண்ணப்பிக்க முடியும் . இந்த கொவிட் -19 முன்பணம் , தொற்று காலத்தில் இபிஎப் உறுப்பினர்களுக்கு குறிப்பாக ரூ .15,000 - க்கும் கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது . தற்போது , வரை இபிஎப்ஓ 76.31 லட்சம் கொவிட் -19 முன்பண கோரிக்கைகளை ஏற்று , உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ .18,698.15 கோடி விநியோகித்துள்ளது . கொவிட் -19 இரண்டாம் அலை சமயத்தில் , ' மியுகோமைகோசிஸ் ' அதிகமாக பரவும் நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிக்கலான நேரத்தில் , உறுப்பினர்களின் நிதி தேவைகளை தீர்க்க , அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இபிஎப்ஓ முயற்சிக்கிறது . ஏற்கனவே முதல் முன்பணம் எடுத்த இபிஎப் உறுப்பினர்கள் , தற்போது , 2 வது முறையாக முன் பணம் எடுக்கலாம். இதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் , முதல் முன்பணம் எடுத்ததற்கான விதிமுறைகளை போன்றதுதான்.

IMG-20210531-WA0025