கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிவாரணம்: பிரதமர் அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த நிலையில் நம் இந்தியாவையும்  விட்டுவைக்கவில்லை.பல  குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ளார்கள். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றது.இதனையொட்டி பிரதமர் மோடி பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம்கேர்ஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்

 கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் 10 லட்சம் வைப்பு தொகை தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது அவர்களுக்கு மாதாந்திர தனிப்பட்ட தேவைகளை கவனித்துக் கொள்வதற்கான மாதாந்திர நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 18 வயதாகும் போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர் கல்வி ஊக்கத் தொகை பெறுவதற்கு பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் 23 வயதை அடையும் போது தங்களது டெபாசிட் தொகையை தனிப்பட்ட அல்லது தொழில்முறை சேவைகள் பெறுவார்கள் என்றும் குழந்தைகள் இந்த நாட்டின்  எதிர்காலத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறார்கள் அவர்களுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு என அனைத்தையும் அரசு உடனடியாக வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 இதன் காரணமாக அவர்கள் வலுவான குடிமக்களாக வளர்ந்து பிரகாசமான எதிர்காலத்தை பெறுவார்கள் என்றும் இது போன்ற கடினமான தருணங்களில் ஒரு சமூகமாக நாம் குழந்தைகளை பராமரிப்பது ஒளிமயமான எதிர்காலத்திற்கு நம்பிக்கையை விதைப்பது நமது கடமையாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். 

மேலும் கொரோனா  நோய்  தொற்றின் காரணமாக பெற்றோர் சட்டபூர்வ பாதுகாப்பு பெற்றோர்களை இழந்த அல்லது அனைத்து குழந்தைகளுக்கும் பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் இந்த டெபாசிட்  தொகையை பெறுவார்கள். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி அல்லது தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு அனுமதிக்கப்படும்.

 தனியார் பள்ளியில்   சேர்க்கப்பட்டால் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து கட்டணங்கள் செலுத்தப்படும்.குடும்பத்தில்  வருமானம் ஈட்டும் நபர் கொரோனாவால் இறக்கும் பட்சத்தில் இஎஸ் ஐ பென்சன் திட்டத்தின் கீழ் தினசரி ஊதியத்தில் 90% பென்சனாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும்.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியுடன் இனைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் காப்பீட்டு பலன் 6லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது இந்த பலனும் அவர்களின் குடும்பத்திற்கு தரப்படும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.