# Breaking :தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை தமிழக அரசு அறிவிப்பு!

 
 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு வருவதால் தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மற்றும் திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளது. எனவே தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை இன்று விதித்துள்ளது:
 திருவிழாக்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 9 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.