நாளை மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!

 

 


 

 
 வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமானது .இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து இதுவரை 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் ஆர்வத்துடன் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர் .நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைவதால் இன்றும் நாளையும் மிக அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.