அவ்வையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு:மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு! 

 நமது தமிழ் செய்திவளை தளத்திற்கு கிடைத்த தகவல் இதோ உங்களுக்காக: காஞ்சிபுரம் கலெக்டர் மகேஷ்வரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 8ஆம் தேதி 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. 

அப்போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவை புரிந்த வருவதற்கு முதலமைச்சரால் அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் .சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் ஆக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படம் ,பத்திரிக்கை, செய்தி தொகுப்பு, சேவையாற்றிய விரிவாக அறிக்கையுடன்  கருத்துருவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து அதன் இரண்டு நகல் மற்றும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வரும் 8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம்,எண். 43, இரண்டாவது தெரு, காந்தி நகர்,  செவிலிமேடு ,காஞ்சிபுரம் 631501 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி இரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.