பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை.பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு! 

 தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

 இதையடுத்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோரிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்.

 இது குறித்து அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.