பிறந்த ஆண்டு மாறுபாட்டால் வேலை மறுக்கப்பட்டவருக்கு பணி வழங்க ஐகோர்ட் ஆணை!

நமது தமிழ் செய்திவளை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக பதிவிடப்படுகிறது. சான்றிதழ்களில் பிறந்த ஆண்டு மாறுபட்டதால் 13 ஆண்டுகளுக்கு முன் வேலை மறுக்கப்பட்டவருக்கு நடத்துநர் பணி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த பிறகு வயதை திருத்தும் செய்துள்ளார்; 13 ஆண்டுகளாக வழக்கிலும் தீர்வு காணப்படவில்லை. சில தவறுகள் வாழ்க்கையின் பாதையையே மாற்றி விடுகிறது என நீதிபதி சுரேஷ்குமார் கருத்து தெரிவித்தார்