இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடக் கூடாது .தேர்தல் ஆணையம் உத்தரவு!
கொரோனா பரவல் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என தமிழக அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகம் தேர்தலுக்கு தயாராகி வரும் இந்த நிலையில் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் தமிழக தேர்தல் பணிகளை ஆய்வு செய்தார். தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதேபோல் 80 வயதுக்கு மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .இந்த நிலையை கருத்தில் கொண்டு 50 வயதுக்கு மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் பட்டியலை ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.
0 Comments
Post a Comment