தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க விண்ணப்பிக்க கடைசி தேதி 27. 1. 2021

 நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எலக்ட்ரிக்கல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

மேலாண்மை : தமிழக அரசு

பணி
: மேலாளர்

மொத்த காலிப் பணியிடங்க
ள் : 01

பணியிடம் : நாமக்கல் மாவட்டம்

கல்வித் தகுதி : Electrical & Electronics/ Electronics & Instrumentation /Electrical Instrumentation/ Electronics and Communication/ Automobile/Mechanical Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

    விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
    அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Namakkal District Co-operative Milk Producers' Union Limited, Namakkal and payable at Namakkal.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

    பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.250
    எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி வேட்பாளர்களுக்கு - ரூ.100