தமிழகத்தில் அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட வேண்டும் . சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

 தமிழகத்தில் அரசு சுற்றறிக்கை கடிதங்கள் அனைத்தையும்  தமிழில் தயாரித்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே பல சமூக ஆர்வலர்கள் அரசியல் தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தி வந்த இந்த நிலையில் அரசாணைகள், சுற்றறிக்கை கடிதங்கள் அனைத்தையும் தமிழக  அரசு தமிழில் தயாரித்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை ஐகோர்ட்டில் பழனி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்

. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது தமிழக அரசு தயாரித்து வெளியிட்ட சுற்றறிக்கை கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட வேண்டும் என்ற இந்த மனு வரும் 29-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 பல ஆண்டு கோரிக்கைக்கு பிறகு தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும்  என்பதை  மார்ச் 29ஆம் தேதி தான் பார்க்க வேண்டும்.