பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனம் ரத்து. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு! 

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் நியமனம் ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 54 உதவிப் பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் களுக்கான அறிவிப்பானது கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றாமல் பணி நியமனம் உள்ளதாக பேராசிரியர் சங்கங்கள் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அந்த அறிவிப்பாணையை ரத்து செய்து மேலும் சரியான அறிவிப்பாணையை வெளியிட்டு பணி நியமனத்தை நடத்திக் கொள்ள வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.