எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம். அமைச்சர் செங்கோட்டையன்! 

 

 சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் என கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முடிவு எடுப்பார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு பொருத்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். நடப்பு கல்வியாண்டுக்கான 10 ,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் முதல்வரின் அனுமதி பெற்று அதற்கான அட்டவணை வெளியிடப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்

. கொரோனா ஊரடங்கு காரணமாக 10 ,12ஆம் வகுப்பு களுக்கு 100 சதவீத பாடங்களை நடத்த முடியவில்லை எனவும் குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளை திறக்க முடியவில்லை எனவும் பள்ளிகள் திறக்கும் நாட்கள் குறைந்து வருவதால் அதற்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து அதில் உள்ள அம்சங்களை கொண்டு கேள்விகள் கேட்க வேண்டிய நிலையில் முதல்வர் உத்தரவு வழங்கியுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார் 

.வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர் அதனைப் பொறுத்தே 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.