தேர்ச்சி பெற்ற  ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

  2018 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மூன்று இடங்களில் 41 பேர் கணினி பழுது காரணமாக செல்போன் மூலமாக அந்த தேர்வு அறையில் இருந்தவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர் .

இந்த வழக்கில் குறிப்பிட்ட தேர்வு அறையில் இருந்தவர்களுக்கு மட்டும் மரு தேர்வு வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடையில்லை என்று கூறியது .அதனைத் தொடர்ந்து தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம் கோவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை சந்தித்து மனு அளித்த போது முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் என்று கூறினார். இந்நிலையில் நேற்று 50க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கோபியில் மீண்டும் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தபோது ஓரிரு நாட்களில் முதலமைச்சரிடம் கலந்து பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.