மொபைல் வாங்க பிளஸ் டூ மாணவர்களுக்கு10 ஆயிரம் உதவித்தொகை. மேற்கு வங்க முதல்வர் அதிரடி அறிவிப்பு! 

 மேற்கு வங்க மாநிலத்தில் 9.5 லட்சம் பிளஸ் டூ மாணவர்களுக்கு மொபைல் மற்றும் லேப்டாப் வாங்க அரசு சார்பில் தலா ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் அறிவித்துள்ளார்.

கொரோனா சூழல் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன .மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இந்த நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இந்த அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் 9.5 லட்சம் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மொபைல் மற்றும் லேப்டாப் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார் .கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தாலும் குறுகிய காலகட்டத்தில் மொபைல் போன் மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் பட்ஜெட்டில்  விலைக்குள் அடங்கும் 9.5 சாதனங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

 இதனை அடுத்து மாணவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் பத்தாயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  மேற்கு வங்க மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்த உதவித்தொகை யானது அடுத்த மூன்று வார காலத்திற்குள் மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.