அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு MBBS மாணவர் சேர்க்கையில் உள் இட ஒதுக்கீடு கோரி வழக்கு!

 


 

அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இடம ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த துர்கா தேவி என்ற மாணவி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார் .

சிவகாசி அரசு உதவி பெறும் பள்ளியில் இவர் பபடித்ததாகவும் தற்போது அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசு ஆணைனய அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் வேண்டும் எனவும் இவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . தனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் எனவும் அரசியலமைப்புச் சட்டப்படி அனைவருக்கும் சமமான கல்வி உரிமை அளிக்கப்பட வேண்டும். எனவும் எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்த அரசாணையை அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விரிவுபடுத்தவும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என். கிருபாகரன்,பி.புகழேந்தி ஆகியோர் மனு குறித்து தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ,மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்கள்.நன்றி