தமிழகத்தில் நாளை பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்கள் செயல்படுமா? 

 நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை பொது விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை அத்தியாவசியத் தேவை என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் ,டீசல் நிலையங்களும் தகுந்த பாதுகாப்புடன் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாளை நிவர்  புயலை எதிர்கொள்ளும் மாவட்டங்களான

 கடலூர்

 விழுப்புரம்

 புதுக்கோட்டை

 நாகப்பட்டினம்

 தஞ்சாவூர்

 திருவாரூர்

 செங்கல்பட்டு

 ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல் ,டீசல் நிலையங்கள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும் .புயல் கரையை கடந்த பிறகு மீண்டும் வழக்கம்போல் விற்பனை நடைபெறும் எனவும்  தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.