பதில் : பூரான் கடிக்கு இரண்டு மருந்துகள் உள்ளது .

ஒன்று பூரான் கடித்த இடத்தில் வெளிப்புறமாக தடவும் மருந்து.

இரண்டு விஷத்தை முறிக்கும் வயிற்றுக்குள் கொடுக்கும் மருந்து.

வெளிப்புறமாக பூரான் கடித்த இடத்தில் தடவுவதற்கு மூன்று வகையான மருந்துகள் உள்ளது.

ஒன்று சுண்ணாம்பை தடவலாம்.

இரண்டு வெற்றிலையையும் குறு மிளகையும் மை போல அரைத்து தடவலாம்.

மூன்று குப்பை மேனி இலையும் மஞ்சளையும் ஒன்றாக அரைத்து தடவலாம்.

உற்புறமாக வயிற்றுக்கு கொடுப்பதற்கு மூன்று மருந்துகள் உள்ளது.

ஒன்று சிறுகுறிஞ்சான் இலையை ஐந்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

இரண்டு ஐந்து வேப்ப இலையை கஸ்தூரி மஞ்சளுடன் கலந்து அரைத்து உருண்டை போல் செய்து அதை சாப்பிட வேண்டும்.

மூன்று ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி விட்டு ஐந்து மிளகோடு சேர்த்து அரைத்து அதை சாப்பிட வேண்டும்.

இங்கே நாம் சொல்லிய உட்புறம் மூன்று மருந்தும் வெளிப்புற மூன்று மருந்தும் மொத்தம் ஆறு மருந்தும் மொத்தமாக கண்டிப்பாக எடுக்க  வேண்டிய அவசியம் இல்லை. இதில் எது எது வாய்ப்பு இருக்கிறதோ அதை பயன்படுத்தலாம். இதில் ஒன்றோ இரண்டோ செய்ய முடியவில்லை என்பதற்காக வருத்தப்பட தேவையில்லை.

பூரான் கடித்தால் மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் 24 மணி நேரத்திற்கு லேசாக கடுகடுப்பாக இருக்கும் .எனவே அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பூரான் கடிக்காக பெயின்கில்லரோ,  ஆன்டிபயாடிக்கோ எடுக்க வேண்டிய அவசியமில்லை.

கண்டிப்பாக அது ஆபத்தை ஏற்படுத்தாது.

இந்த வைத்தியத்தை கற்றுக்கொடுத்த எனது நண்பர் பொள்ளாச்சி ஹீலர் குமார் அவர்களுக்கு நன்றி.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
மூன்று நாள் வகுப்பு .
சென்னை.
2019 - NOV - 15 , 16 , 17.
PH : +918870666966.