🔵🔴Tamilseithi🔴🔵


➡➡➡தமிழகத்தில் நாளை டெங்கு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டில் 3 ஆயிரத்து 223 போ டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 3 போ மட்டுமே பலியாகி உள்ளதாகவும் சுகாதாரத்துறை சாா்பில் உயா் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூா்யபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தமிழக அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.