தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்தாகுமா? நாளை அவசர ஆலோசனை!

சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள இந்த நிலையில் தமிழகத்தில் மாநில கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்துவது குறித்து நாளை தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்த அவசர ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், செயளர் காக்கிலா உஷா அவர்கள், ஆணையர் நந்தகுமார் அவர்கள், தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி ஆகியோர் பங்கு  பெறுகின்றனர். 

ஆலோசனைக்குப் பின் தேர்வு நடைபெறுமா? என்பது தெரியவரும் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் பெரும்பாலும் தமிழகத்திலும் பிளஸ் 2  பொதுத் தேர்வு ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.