தமிழகத்தில் இன்றும் நாளையும் 4, 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு!


 தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று பல்வேறு ஆலோசனை கூட்டங்களில் ஈடுபட்டார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களின் பரிசீலனைப்படி  மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 முழு கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கும் வருகிற 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது .இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் செயல்படும் அதேபோல் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது .

அதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல1, 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டும் என தமிழக அரசு பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 

மேலும் பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு  தெரிவித்துள்ளது.