தஞ்சையில் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து முதியவர் பலி!

 தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை செய்து கொண்டு வருகிறார்கள்.

  இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி அய்யம்பேட்டையில் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது அப்போது அங்குள்ள தனியார் அமைத்த வாக்குச்சாவடிக்கு அர்ஜீனன்  62 வயது மதிக்கத்தக்க முதியவர் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார் நீண்ட நேரம்  இருந்த அவர் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். நெஞ்சு வலி மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு உள்ளதாகவும் இதனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.