ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் மீண்டும் இடைதேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

 
ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் இன்று காலை காலமானார் இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தபோது  அவர் கூறியதாவது

 வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல் நடைபெறும் தேர்தலில் ஒரு வேளை மாதவராவ் வெற்றி பெற்றிருந்தால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். முன்னதாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர்  இவருக்கு வயது 63 இவர் வேட்புமனு தாக்கல்  செய்தது முதல் கொண்டே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

 நுரையீரல் தொற்று காரணமாக மதுரை கேகே நகர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று இவரின் உடல் நிலை மோசமானது எனவே இன்று காலை 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். எனவே  ஸ்ரீவில்லிபுத்தூரில் மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.