இன்னும் இரண்டு நாட்கள் தான்.. மீண்டும் அமலாகிறது அதிரடி ஊரடங்கு..!

 தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, ஒரே நாளில் 3,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் பலியான நிலையில், 1824 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்திருந்தாலும், பிரச்சார கூட்டங்களில் மக்களின் அலட்சியம் காரணமாக ஒரு சில நாட்களில் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.