தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பா? நாளை ஆலோசனை .

 தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக நாளை முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது பற்றி தலைமைச் செயலாளர் தலைமையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை செயலர்கள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் +2 தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.