அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60- ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு. !


அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்திற்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60- ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


திருச்சியை சேர்ந்த பலமுரளிதரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்


முன்னதாக தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58- ஆக இருந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி கொரோனா நெருக்கடி காலத்தை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டது.


அதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.


இந்த நிலையில், திருச்சி  துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியவதாவது, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை.


மேலும் கொரோனா காரணமாக அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்தாமல், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் மட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர் என அவர் தெரிவித்து இருந்தார்.


இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு , தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.