தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
02-04- 2021 முதல் 04-04- 2021 வரை
சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
வேலூர்
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
திருவள்ளூர்
திருவண்ணாமலை
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
சேலம்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
நாமக்கல்
கரூர்
திருச்சிராப்பள்ளி
பெரம்பலூர்
அரியலூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மதுரை
சிவகங்கை
விருதுநகர்
புதுக்கோட்டை
மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்ப நிலையானது இயல்பை விட 42 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
05-04- 2021 அன்று
கரூர்
தர்மபுரி
சேலம்
நாமக்கல்
கிருஷ்ணகிரி
திண்டுக்கல்
திருப்பூர்
ஈரோடு
கோவை
மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வெப்பநிலையானது இயல்பை விட 4 லிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன் காரணமாக ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்றும் பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் 4 மணிவரை மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வது மற்றும் ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்
மதுரை
சிவகங்கை
விருதுநகர்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 01-4 -2021 முதல் 06-04 -2021 வரை தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
0 Comments
Post a Comment