தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க ஆலோசனை?

*சென்னை: சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


*நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.


*இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா, உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.


*இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

 சென்னை

 செங்கல்பட்டு

கோயம்புத்தூர்

திருவள்ளூர்

 தஞ்சாவூர் 

ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்வதாக தகவல் கசிந்துள்ளது.