தேர்தலுக்குப் பிறகு பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடத்த முடிவு!

! தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்குத் தேர்தல் நடந்து முடிந்த பின் செய்முறைத் தேர்வை நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதுவரை பாடங்களை நடத்தி முடிக்க வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்க ளுக்கு மட்டும் நிகழாண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந் தத் தேர்வு வரும் மே 3-ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை நடக்கிறது. தேர்வு தேதிக்கு முன், ஏப்.5-ஆம் தேதி தமிழக சட்டப்பே ரவைத் தேர்தல் முடிந்து விடும்.

இதனால், பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவும், அவர்களுக்கான பாடங்களை உரிய காலத்தில் முடிக்கவும், போதிய கால அவகாசம் கிடைத்துள்ளது. எனவே, இந்த அவகாசத்தை பயன்படுத்தி, பிளஸ் 2 செய்முறைத் தேர்வை, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் ஏப்ரலில் நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.