கோடை காலம் தொடங்கிவிட்டது. முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள சில எளிய வழிமுறைகள் இதோ!!


* கோடை காலங்களில் நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் சாப்பிடுவதால்  முக அழகு கூடும் . முகம் வெள்ளையான சருமம் வேண்டுமானால் இரவில் படுக்கும் செல்வதற்கு முன்பு எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வர முகத்தில் விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.


* ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.


* பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் முகத்தை கழுவ வேண்டும் இப்படி செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.